இந்நிலையில் நேற்று அவ்வழியே செல்லும் போது கால் தவறி ஆர்த்திகா கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்தவர்கள் உடனே மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி ஆர்த்திகாவை உயிருடன் மீட்டு அவருடைய தந்தை ராஜாவிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.