Friday, June 28, 2024
Home » மங்கலம்பேட்டை அருகே ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்-மாணவர்கள் மறியல்

மங்கலம்பேட்டை அருகே ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்-மாணவர்கள் மறியல்

by Lakshmipathi

மங்கலம்பேட்டை : கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாகவும், ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நேற்று விருத்தாசலம்-மங்கலம்பேட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து, மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

You may also like

Leave a Comment

11 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi