Sunday, September 29, 2024
Home » மாங்காடு அருகே தாய் தீ வைத்ததில் மனவளர்ச்சி குன்றிய மகள் சிகிச்சை பலனின்றி பலி

மாங்காடு அருகே தாய் தீ வைத்ததில் மனவளர்ச்சி குன்றிய மகள் சிகிச்சை பலனின்றி பலி

by Karthik Yash

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் நடராஜன் (42). இவரது மனைவி சுலோச்சனா (48). மகன் தினேஷ்குமார் (23), மகள் மீனாட்சி (18). இந்நிலையில், நடராஜனின் மகள் மீனாட்சி பிறந்தது முதல் தற்போது வரை மனவளர்ச்சி குன்றி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்து வந்தார். அவரை தாய் சுலோச்சனா பராமரித்துவந்தார். இந்நிலையில், பருவவயதை அடைந்த பிறகும் மீனாட்சி, தொடர்ந்து உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால், தனக்கு பின்னால் தனது மகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தில் இருந்த தாய் சுலோச்சனா, கடந்த 2 தினங்களுக்கு முன், வீட்டில் சமையல் செய்வதற்காக வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து, தனது உடலிலும், மகள் உடலிலும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் இருவருக்கும் பலத்த காயமடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், சுலோச்சனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி, நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மாங்காடு போலீசார், மீனாட்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தாய், மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi