சென்னை: சென்னை மாங்காடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி அடித்துக்கொன்றவர் கைது செய்யப்பட்டார். முகலிவாக்கத்தில் அண்ணன் சுகுமாறனை கொலை செய்த தம்பி அருள்ராஜ் கைதாகினார். கொலையை தடுக்க வந்த மற்றொரு அண்ணன் வள்ளியப்பனை அருள்ராஜ் கத்தியால் குத்தினார். அருள்ராஜ் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த வள்ளியப்பன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.