இதையடுத்து மண்டியாவில் தனித்து போட்டியிடுவது உறுதி என்று சுமலதா அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சுமலதா, ‘பாஜவில் இணைவதாக முடிவெடுத்தார்’. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘ எனது சேவை பாஜவிற்கு தேவை என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. பிரதமருக்கு மரியாதை கொடுத்து நான் பாஜவில் இணைகிறேன். என்னை வேறு தொகுதியில் போட்டியிடுமாறு பாஜ தலைவர்கள் கூறினர். மண்டியாவின் மருமகளான நான் வேறு தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை. மண்டியாவில் பாஜவின் வளர்ச்சிக்காக உழைப்பேன். பாஜவில் இணைந்த பின்னரே, குமாரசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.