இதனையடுத்து கடலில் நீச்சல் பயண துவக்க விழா, மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மீன்கள் விற்பனை கூடாரத்தில் நேற்று அதிகாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீனவ சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். வேளச்சேரி மாவட்ட விளையாட்டு அலுவலர் லோகநாதன் வரவேற்றார்.
பின்னர் 15 சிறப்பு குழந்தைகள் மூன்று நாட்டுப் படகுகளில் கரையில் இருந்து காலை 6.30 மணியளவில் புறப்பட்டு கடலில் குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த 5 பைபர் படகுகளுக்கு சென்றனர். அங்கிருந்து மெரினா கடற்கரையை நோக்கி நீந்தும் பயணத்தை தொடங்கினார்.
இதுகுறித்து பயிற்சியாளர் லோகநாதன் கூறுகையில், ‘‘தினமும் காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை, 12 மணிநேரம் நீச்சல் பயணம் இருக்கும்.
பின்னர் ஒவ்வொரு இரவும் தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈச்சம்பாடி உள்பட கடல் கரையோரம் அருகேயுள்ள பகுதிகளில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். 11 நாட்கள் நீந்தி ஆக. 15ம் தேதி சுதந்திர நாளன்று சென்னை மெரீனா கடலோர பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.