நேற்று முன்தினம் இரவு உடையார்வலசை பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் இவருக்கு சொந்தமான 11 ஆடுகள் மற்றும் 7 குட்டிகளை கடித்துக் குதறின. இதில் 8 ஆடுகள் மற்றும் 5 குட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மற்றவை உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தன. நேற்று காலை ஆடுகளை பார்க்க வந்த ராமு, நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காயமடைந்த ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த சம்பவம் குறித்து மண்டபம் காவல் நிலையம் மற்றும் சாத்தக்கோன்வலசை விஏஓவிடம் ராமு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் ஆடுகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் அதிமாக இருக்கும் என அவற்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.