காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் சொங்காப்புள்ளி கோயிலில் ஆடிப்படைப்பு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் புதுக்கோட்டை, காரைக்குடி. சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 8 மாடுகள் அழைத்து வரப்பட்டன. ஒரு மாடுக்கு 15 நிமிடம் ஒதுக்கப்பட்டு மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கினர். ஒரு குழுவுக்கு 9 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்தி (24) மீது மாடு பாய்ந்ததில் படுகாயமடைந்த அவர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.