மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் உதவி வழங்கப்படும். பணி இழந்த தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, வீடுகள், வாழ்வாதாரத்துக்கான உதவிகள் செய்து தரப்படும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.