ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஏக்கரில் மட்டுமே இப்போது தேயிலை பயிரிடப்பட்டு வருகிறது. இருப்பினும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காப்பதில் அரசு எப்போதும் முன்நிற்கும். அப்பகுதியை வனத்துறைக்கு முழுமையாக கொடுப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் உள்ள அகஸ்தியரை தரிசிக்க நமக்கு அனுமதியில்லை. ஆனால் கேரளாவில் அனுமதி கிடைக்கிறது. எனவே வனத்திற்குள் நமது ஆட்கள் எப்போதும் இருக்க வேண்டும் அதுதான் வனத்திற்கு பாதுகாப்பு. மூணாறில் கேரள பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்றதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தோட்டத் தொழிலாளர்கள் அங்கு இருப்பது நாட்டுக்கும், வனத்திற்கும் பாதுகாப்பாக அமையும். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டம், தொழில் செய்ய நிதியுதவி ஆகியவற்றை அளித்திட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.