திருச்சி: மணப்பாறையில் தந்தை வாங்கிய கடனுக்காக அவரது மகனை பா.ஜ.க. நிர்வாகி காரில் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடத்திச் செல்லப்பட்ட ஞானப்பிரகாசம் மகன் எபினேசனை (22) போலீசார் 12 மணி நேரத்தில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகி சேகரை, தனிப்படை போலீசார் புதுச்சேரியில் கைது செய்தனர். ஸ்டேஷனரி கடை வைத்துள்ள ஞானப்பிரகாசம், தனது நண்பரான சேகரிடம் 8 மாதம் முன் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.