சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!

சென்னை: சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரவாயல் மற்றும் வானகரத்தில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, மடிப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயில், போரூர் என நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

Related posts

மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம்

ராத்திரியில் ரயிலில் விட்டு சென்ற ‘கல் மனசு தாய்’ ‘அம்மாவ காணோம்’… அழுது துடித்த பெண் குழந்தை

மர பொம்மை எனக்கூறி பார்சலில் கஞ்சா கடத்தல்..!!