மணலி புதுநகரில் வீடு தீப்பிடித்து எரிந்தது

திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் முத்துவேல்(40). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் முத்துவேல், தனது சொந்தஊரான திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். நேற்று நள்ளிரவு முத்துவேல் வீட்டில் இருந்து புகை வந்ததால் விஜயகுமார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மணலி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் உள்ள கட்டில், பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து நெல்லையில் உள்ள முத்துவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

Related posts

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

இந்து மத கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: பாஜ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சரவை குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு