குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கழிவுநீரை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’பயோகேஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல்சிரமப்பட்டு வருகின்றனர். துர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்’ என்றனர்.