விசாரணையில் அந்த முதியவர் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் பெருமாள் (92) என்பது தெரிய வந்தது. பெருமாளுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் உத்திரமேரூரில் உள்ள ஒரு மகளின் வீட்டுக்கு அவர் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அவர் எப்படி இந்த பகுதிக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தில் உள்ள அவரது மகள்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.