கோயில் உண்டியலை திருடியவர் சிக்கினார்

திருவொற்றியூர்: எண்ணூர், காமராஜர் நகரில் ஓம் நவசக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. நேற்று காலை, வழக்கம் போல் கோயிலை திறக்க வந்தபோது, நுழைவாயிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாகி திருசங்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். இவர், மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்