வாலிபர்களை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (25). இவரது நண்பர் வாசு. கடந்த 24ம் தேதி இவர்கள் இருவரும் போரூர் காரம்பாக்கம் பகுதியில் பைக்கில் சென்றனர். அப்போது இவர்களை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த நபர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்த ரூ.800ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், வழிபறியில் ஈடுபட்டவர் கோவூர் பகுதியைச் சேர்ந்த யாக்கோபு (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். யாக்கோபு மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!