திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ராணுவ வீரரின் மனைவியிடம் 27 சவரன் நகை திருடிய வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து நகை, பணத்தை திருடிய புகாரில் ரவி என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய ரவியின் மனைவி, மற்றொரு பெண்ணை போலீஸ் தேடி வருகிறது.