அப்போது, அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்கள் அவரை வழிமறித்து மொமைல் ஹாட்ஸ்பாட்டை பகிர வலிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஹாட்ஸ்பாட்டை பகிரி மறுத்துள்ளார். இதனால் இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில், ஆவேசம் அடைந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திர குல்கர்னியை குத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை அடுத்து இளைஞர்கள் அங்கிருந்த தப்பிச் ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து மயூர் மோசாலே என்ற இளைஞரையும் 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.