சென்னை : நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்து, அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். “ஒவ்வொரு மருத்துவரை உருவாக்க மாநில அரசு ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறது என்றும் அதனால், மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கே உண்டு” என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்