கொல்கத்தா : ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில் ஜார்க்கண்டில் தடம் புரண்டு 2 பேர் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், “நான் சீரியசாக கேட்கிறேன்.. இதுதான் ஆட்சியா? ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்தால் மரணங்கள், படுகாயங்கள் நடக்கின்றன. எவ்வளவு காலம் இதை நாம் பொறுத்துக்கொள்ள போகிறோம். ஒன்றிய அரசின் அலட்சியத்திற்கு ஒரு முடிவே இல்லையா?”இவ்வாறு தெரிவித்துள்ளார்.