இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராவ் அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் தேவையான மாற்றங்களை சேர்த்து புதிய மனுவை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரினார். இதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் வழக்கை நேற்று விசாரணைக்கு ஒத்திவைத்து இருந்தது. இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணாராவ் முன்னிலையில் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வருகிற 10ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.