சோப்ரா: இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தநிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
சோப்ரா நகரில் யாத்திரையை மம்தா நேற்று மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள இஸ்லாம்பூரிலும் அவர் பாத யாத்திரையாக சென்றார். திரிணாமுல் நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வரை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுக முதல்வருக்கு ஆதரவாக முழக்கமிட்டும் ஏராளமான தொண்டர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர்.