இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் மேற்கண்ட தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்து, அங்குள்ள வீடுகளின் கழிவு நீர் பைப் லைனை பாதாள சாக்கடையில் இணைத்து, பேவர் பிளாக் கல் பதிப்பதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கால்வாயின் மூடிகள் அகற்றப்பட்டன. பின்னர், இதுவரை எந்த பணிகளும் நடைபெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கால்வாயின் அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.