குறிப்பாக, இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஏரியாமல் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில் கிணறு இருப்பது தெரியாததால் எளிதில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு சற்று அருகே உள்ள திறந்த வெளி கிணற்றால், அங்கு குழந்தைகள் விளையாட பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கு, மேய்ச்சலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் அந்த கிணற்றில் தவறி விழுந்தும், கால்கள் உடைந்து காயமடைந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், யாருக்கும் பயன்படாத நிலையிலும் உள்ள கிணற்றை போர்க்கால அடிப்படையில் மண் கொட்டி மூட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.