மாமல்லபுரம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இருந்து ஓஎம்ஆர் சாலை வழியாக திருப்போரூர், கேளம்பாக்கம், தாம்பரம், சென்னைக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சரக்கு லாரி ஒன்று நேற்று மாலை ஓஎம்ஆர் சாலை வழியாக திருப்போரூரை கடந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது, பையனூர் அடுத்த கூத்தவாக்கம் அருகே சென்றபோது, சரக்கு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்