சில சமயங்களில் அவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தநிலையில் தொடர்ந்து, மகாபலிபுரம் பகுதியில் உயிரிழப்புகள் நடைபெற்ற வருவதால், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் , மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, உயிர் காப்பாளர் ஒருவரை நியமனம் செய்ய உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியர் கிருஷ்ணராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணராஜ் பணிநியமன ஆணையை நேரில் பெற்றுக் கொண்டார். அரசு அலுவலர்கள் உனிருந்தனர்.