திருவள்ளூர்: புட்லூர் ஏரியில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புட்லூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல்கிடைத்தது. செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மிதந்தபடி இருந்த 40 வயது மதிக்கத்தக்க சடலத்தை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும். குளிக்கும்போது தவறிவிழுந்து இறந்தார? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வீசினார்களா? என்பது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.