இதன்மூலம், மலேசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள நோயாளிகளுக்கு சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் இயங்கிவரும் பல்வேறு சிறப்புத் துறைகளில் சிகிச்சையை வழங்கப்படும். குளோபல் டாக்டர்ஸ் அலையன்ஸ் என்பது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான், துருக்கி, சீனா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் சார்பு மருத்துவ மையங்களின் வளர்ந்து வரும் ஒரு கூட்டமைப்பாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை, குளோபல் டாக்டர்ஸ் மருத்துவ நிறுவன நோயாளிகளுக்கு தொலைதொடர்பு வழியாக மருத்துவ ஆலோசனையை வழங்குவதுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை உறுப்பினர்கள் தங்களது மருத்துவ அறிவையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளும்.
இந்த மருத்துவமனை, முக்கியமாக இதய நலம் மற்றும் இதய அறுவைசிகிச்சை, நரம்பியல், இரைப்பை குடலியல், எலும்பியல் போன்ற துறைகளில் சிகிச்சை பெறுவதற்காக குளோபல் டாக்டர்ஸ் அமைப்பின் நோயாளிகளும், மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.