சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாள மொழியில் பேசி வாழ்த்துகளை தெரிவித்தார். அனைவரையும் சமமாக பார்க்கும் ஒன்றிய அரசு வரவுள்ளது எனவும் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்து தெரிவித்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம். மாவலியின் நாடு போல தேசத்தில் ஒருமையும், சமத்துவமும் மீண்டும் உண்டாக வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்கும் ஒன்றிய அரசு வரவுள்ளது. நமது உரிமைகள் மீட்டெடுக்கப்படும். எனது பிரியமான மலையாளிகளுக்கு ஓணம் வாழ்த்துகள்.