கிழக்கு ஆப்பிரிக்க நாடானா மலாவியில் துணை அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது. குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காததால் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக கிராம மக்கள் தெரிவித்ததால் விசாரணை நடைபெறுகிறது. ஹெலிகாப்டரில் பயணித்த மலாவி துணை அதிபர் சவுலஸ் சிலீமா விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மலாவி அதிபர் தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.