மலப்புரத்தில் உயிரிழந்த வாலிபருக்கு நிபா வைரஸ் பாதிப்பு: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மலப்புரம்: கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூலை 21ம் தேதி நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மலப்புரத்தை சேர்ந்த சிறுவன் உயிரிழந்தான். இது நடப்பாண்டில் பதிவான முதல் நிபா வைரஸ் இறப்பாகும். இந்நிலையில் மீண்டும் ஒரு இளைஞர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து மலப்புரம் வந்த 24 வயது இளைஞர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். அவர் நிபா வைரஸ் பாதிப்பால் பலியானதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று உறுதி செய்துள்ளார்.உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு