மும்பை: மும்பையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மலைகாவின் தந்தையின் சம்பவம், பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, இன்று காலை 9 மணியளவில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், மலைகாவின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் அனில் அரோராவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த மலைகாவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கானும், அவரது வீட்டிற்கு சென்றார்.
மலைகாவின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அர்பாஸ் கான், போலீசார் மற்றும் பிறருடன் பேசிக் கொண்டிருந்தார். மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்திய வணிகக் கடற்படையில் பணியாற்றிய அனில் அரோரா மலையாளி கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் பாலிகார்ப்பை மணந்தார். இந்நிலையில் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.