விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் அமர்ந்து 2 பேர் மது அருந்திய பிறகு சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் தீ விபத்து ஏற்பட்டது. வாசுபள்ளி நானி, அவரது மாமா சத்தியம் ஆகியோர் படகு ஒன்றில் அமர்ந்து மது அருந்திவிட்டு சிகரெட் பிடித்துள்ளனர்.