முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால தமிழகத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 50 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2375 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 58 மில்லியன் கனஅடியாக உள்ளது.

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 303 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 34.66% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 34.37%, புழல் – 71.97%, பூண்டி – 2.66%, சோழவரம் – 5.36%, கண்ணன்கோட்டை – 60.6 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்