பவானி: பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும், 22 கிலோ வாட் மின் தொடர்களில் காலநிலை பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. மின்கம்பம் மற்றும் கம்பிகளை தொட்டபடி செல்லும் மரங்கள், மரக் கிளைகளால் பலத்த காற்று, மழை பெய்யும்போது கம்பிகளில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால், நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகளை தொட்டபடி செல்லும் மரக்கிளைகள் இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. தேவைப்படும் இடங்களில் ராட்சத இயந்திரங்கள் உதவி கொண்டு மரக்கிளைகள் வெட்டப்பட்டது. பவானி நகரம், குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகர், வர்ணபுரம், ஊராட்சிக்கோட்டை, ஆண்டிகுளம், ஜீவா நகர், கூடுதுறை, சொக்கரம்மன் நகர் ஆகிய பகுதிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.