கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே 4 நாள் அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சீன பிரதமர் லீ கியாங் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின்போது சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், முதலீடு மற்றும் இலங்கைக்கு நன்மை தரும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீன பயணம் முடித்து வருகிற ஒன்றாம் தேதி அவர் இலங்கை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.