திருமங்கலம்: மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி விடும். அவரது பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நல்வழிகாட்டும் முறைகள் குறித்தும், அவர்களுடைய ஆற்றலை வலுப்படுத்தும் விதமாகதான் பேச வேண்டும்.
இவ்வாறு பேசுவதை விட்டுவிட்டு சர்ச்சையான பேச்சினை மகாவிஷ்ணு பேசியுள்ளார். இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். மகாவிஷ்ணு பேசிய பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. இவ்வாறு கூறினார்.