மகாவிஷ்ணு பேச்சு விவகாரம் விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

சென்னை: சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள மாதிரிப் பள்ளியில், மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊட்டும் உரையாடல் நிகழ்வில் மதுரையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, தற்போது மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கடந்த 6ம் தேதி விசாரணை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக விசாரணை அறிக்கை தயார் செய்யும் பணி நடந்த நிலையில், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் மதுமதியிடம், இயக்குநர் கண்ணப்பன் நேற்று அந்த அறிக்கையை ஒப்படைத்தார்.

Related posts

மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

ரூ.14 ஆயிரம் கடனுக்காக 2 சிறுவர்கள் கொலை: நண்பனின் மகன்களை தீர்த்துக்கட்டிய கட்டிட மேஸ்திரி கைது

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி