இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த வாரம் சைதாப்பேட்டை, அசோக்நகர் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் விசாரணை அறிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிகளில் பேச அனுமதித்ததற்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் என்பவர்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஏஞ்சலோ இருதராஜ், சென்னை மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.