மகா விகாஸ் அகாடிக்கு வாருங்கள், எம்விஏ வேட்பாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறியிருந்தார். உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கள் கேலிக்குரியது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘தாக்கரேவின் கருத்து முதிர்ச்சியற்றது மற்றும் கேலிக்குரியது. பாஜவில் வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் முறை உள்ளது. சிவசேனா தலைவர் பாஜ தலைவர்களை குறித்து கவலைப்பட தேவையில்லை” என்றார்.