சென்னை : மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் தாம் அஞ்சலி செலுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ரவி, அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.