மும்பை: நடிகர் ஷாருக்கானுக்கு மகாராஷ்டிரா காவல்துறை ‘Y+’ பாதுகாப்பை வழங்கவுள்ளது. நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்போவதாக மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது.
பதான், ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில் மகராஷ்டிரா காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், கொலை மிரட்டலை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு ‘Y+’ பாதுகாப்பை மகாராஷ்டிர அரசு வழங்கியது.
பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த சூழலில் ஷாருக்காருனுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.