புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள கில்ஹோனி சுரங்கம் கடந்த 1998ம் ஆண்டு நிப்பான் டென்ரோ இஸ்பாத் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1993-2005ம் ஆண்டு வரையிலான சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போதைய காங்கிரஸ் எம்பி சந்தீப் தீக்ஷித் மற்றும் 6 எம்பிக்கள் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் சிபிஐ சுமார் 4 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் கடந்த 23ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.