மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழ்ந்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாக்பூரில் உள்ள பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பேக்கிங் செய்யும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
முதற்கட்ட தகவலில் காலை முதல் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் 6 ஆண்கள் எனவும் 3 பெண்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களில், இருவர் வார்தாவில் வசிப்பவர்கள், ஒருவர் சந்திரபூரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அமராவதியைச் சேர்ந்தவர், மேலும் ஐந்து பேர் நாக்பூரில் வசிப்பவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.