Thursday, July 4, 2024
Home » மகாராஷ்டிராவில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி

மகாராஷ்டிராவில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி

by Suresh

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழ்ந்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்பூரில் உள்ள பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பேக்கிங் செய்யும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

முதற்கட்ட தகவலில் காலை முதல் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் 6 ஆண்கள் எனவும் 3 பெண்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர்களில், இருவர் வார்தாவில் வசிப்பவர்கள், ஒருவர் சந்திரபூரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அமராவதியைச் சேர்ந்தவர், மேலும் ஐந்து பேர் நாக்பூரில் வசிப்பவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi