எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தவும், குறைபாடுகளை சரிசெய்யவும் அரசு பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு கட்சித் தலைமையை கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களது வழிகாட்டுதலின் படி செயல்படுவேன். முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பணிபுரிவதில் சில பிரச்னைகள் உள்ளன. அதனையும் விரைவில் பேசி சரிசெய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டே நாட்களில் பட்நவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்திருப்பது மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஷிண்டே கூறுகையில், ‘‘ பட்நவிசுடன் விரைவில் இது குறித்து பேச உள்ளேன்’’ என்றார்.