மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மெல்கோத்தாவில் உள்ள சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது 30 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் 50 பேரும் காயமடைத்ததாகவும் அதில் 3 பேரின் நிலைமை கவலை கிடமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சியர் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நிவாரண பணிகளை தொடங்கியது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி