முதற்கட்ட விசாரணையில் 50 பேரும் காயமடைத்ததாகவும் அதில் 3 பேரின் நிலைமை கவலை கிடமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சியர் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நிவாரண பணிகளை தொடங்கியது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.