இந்த சொகுசு பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணித்திருந்தனர். விபத்து நடந்தவுடன் மற்ற சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி உதவிக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 58 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த சப்புதாரா காவல் ஆய்வாளர் போயா, ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். இதற்கிடையில், காயமடைந்தவர்கள் ஷாம்கவன் சிஎச்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சப்புதாரா போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.