மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் முறைகேடு எனக் கூறி ரூ.826 கோடி மதிப்பிலான 350 டெண்டர்கள் பீகாரில் ரத்து

பாட்னா: பீகாரில் பாஜ கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரசுடன் கைக்கோர்த்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. மீண்டும் பாஜவுக்கு தாவிய நிதிஷ் குமார் பீகார் முதல்வராக ஜனவரி 29ம் தேதி பதவியேற்றார். இப்போது பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் கிராமப்புற நீர் விநியோக திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ரூ.826 கோடி மதிப்பிலான 350 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு