இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கார்மேகத்தை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து மதுரவாயல் தனிப்படை போலீசார் கார்மேகத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்பு மதுரவாயலில் நேற்று கார்மேகம் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட கார்மேகத்தை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.